பூட்டியிருந்த வீட்டிற்குள் சென்று பிரிட்ஜ் திருடிய நபர் கைது

பூட்டியிருந்த வீட்டிற்குள் சென்று பிரிட்ஜ் திருடிய நபர் கைது

மயிலாடுதுறை அருகே குத்தாலம் ராஜகோபாலபுரம் பகுதியில் வசித்து வரும் செல்வகுமார் வீட்டில் பிரிட்ஜ், செல்போன், கொலுசு ஆகியவைகளை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.


மயிலாடுதுறை அருகே குத்தாலம் ராஜகோபாலபுரம் பகுதியில் வசித்து வரும் செல்வகுமார் வீட்டில் பிரிட்ஜ், செல்போன், கொலுசு ஆகியவைகளை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை அருகே குத்தாலம் ராஜகோபாலபுரம் பகுதியில் வசித்து வருபவர் சண்முகம் மகன் செல்வகுமார் இவரது மகன் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். மகன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த டிசம்பர் மாதம் வீட்டை பூட்டிவிட்டு திருப்பூர் சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டில் இருந்த பிரிட்ஜ் செல்போன் கொலுசு ஆகிய பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது இது குறித்து குத்தாலம் காவல் நிலையத்தில் செல்வகுமார் புகார் அளித்திருந்தார், விசாரணையில் அதே பகுதி அக்ரஹாரம் தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவர் இப்பொருட்களை திருடி சென்று தன் வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது, உடனடியாக பொருட்கள் கைப்பற்றப்பட்டு சக்திவேலை குத்தாலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story