வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது

பொள்ளாச்சி அடுத்த குள்ளக்காபாளையத்தில் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்த நபரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அடுத்துள்ள குள்ளக்காபாளையம் பகுதியில் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்து வந்த நபர் கைது - 13 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார்.. பொள்ளாச்சி..ஜூன்..01 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள குள்ளக்காபாளையம் கிராமத்தில் ஒரு வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது..

இந்த தகவலை அடுத்து குள்ளக்கா பாளையம் கிராமத்துக்குச் சென்ற பொள்ளாச்சி தாலுகாகாவல் நிலைய போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில் குள்ளக்காபாளையம் ஜே ஜே காலனியில் வசித்து வரும் டெய்லர் தொழில் செய்து வரும் ஈஸ்வரன் என்பவர் தனது வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஈஸ்வரனை காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வீட்டில் வளர்க்கப்பட்ட 13 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்யப்பட்டு ஈஸ்வரனை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். ம.சக்திவேல்..பொள்ளாச்சி..9976761649..

Tags

Next Story