டாஸ்மாக் கடை திறக்கும் முன்னே மது பாட்டில் விற்ற நபர் கைது

டாஸ்மாக் கடை திறக்கும் முன்னே மது பாட்டில் விற்ற நபர் கைது

காவல்துறை விசாரணை


மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயில் கீழையூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர்பதுக்கல் மதுபாட்டில் விற்ற நபரை பிடித்து செம்பனார் கோயில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டப்பேரவை தொகுதி கீழையூர் மயானம் அருகே வி.நடராஜன் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட சோதனையில் பாண்டிச்சேரி மாநிலத்தின் மதுபாட்டில்களை விற்பனை செய்யபடுவதை கண்டறிந்த தேர்தல் குழுவினர், பாண்டிச்சேரி மாநில 21 குவார்ட்டர் மதுபாட்டில்கள் மற்றும் தமிழ்நாடு மாநிலத்தின் 30 குவார்ட்டர் பாட்டில்கள் என மொத்தம் ரூ.5292 மதிப்பிலான 51 குவார்ட்டர் பாட்டில்களையும், மற்றும் இந்த சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்ட மயிலாடுதுறை நல்லத்துக்குடியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரையும் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் .

Tags

Next Story