சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது

சூதாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கைது

சவரிமுடி தெருவில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் தில்லை கரசிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜூன் 14ஆம் தேதி மாலை 4 மணியளவில், தாந்தோணி மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது சவரிமுடி தெருவில் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டபோது, சவரிமுடி தெரிவில் குமார் வீட்டில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், குணசேகரன்,ராமச்சந்திரன், திருமாநிலையூரை சேர்ந்த மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 1050ஐ பறிமுதல் செய்தனர். பின்னர், நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.

Tags

Next Story