மாரியம்மன் ஆலய 62 ஆம் ஆண்டு தீமிதி விழா

மாரியம்மன் ஆலய 62 ஆம் ஆண்டு தீமிதி விழா

மயிலாடுதுறை பெரிய மாரியம்மன் ஆலயத்தில் 62ஆம் ஆண்டு தீமிதி உற்சவத்தில் 16 அடி நீள அலகு குத்தியும், அலகு காவடி எடுத்தும் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


மயிலாடுதுறை பெரிய மாரியம்மன் ஆலயத்தில் 62ஆம் ஆண்டு தீமிதி உற்சவத்தில் 16 அடி நீள அலகு குத்தியும், அலகு காவடி எடுத்தும் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த பெரிய மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் 62-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 1-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் 10-ஆம் நாள் திருவிழாவான தீமிதி திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காவிரிக் கரையிலிருந்து செண்டை மேளம் முழங்க பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன் சக்தி கரக ஊர்வலம் துவங்கியது.

சக்தி கரகம், மஞ்சள் உடை உடுத்திய பக்தர்கள், 16 அடி நீள அலகு குத்திய பக்தர்கள், அலகுகாவடி, ஆகியவை ஊர்வலமாக ஆலயத்தினை வந்தடைந்தன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். தொடர்ந்து அம்மன் வீதியுலா நடைபெற்றது.

Tags

Next Story