இவரும் மயிலாடுதுறைகார்தானாம்? இவருக்கு சீட்டு இல்லாமல் வேறு யாருக்கு??

இவரும் மயிலாடுதுறைகார்தானாம்? இவருக்கு சீட்டு இல்லாமல் வேறு யாருக்கு??


எஸ்.எம்.பி.துரை வேலன் 

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப் போவதாக பேச்சு எழுந்துள்ள நிலையில் வேட்பாளர்களை டெல்லியில் தேடாதீர்கள் உள்ளூர்காரனுக்கு வழங்குங்கள் என காங்கிரஸ் பிரமுகர்கள் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் முதல் எஸ்.எம்.பி.துரை வரை அறிக்கை போர் விட்டு கொண்டிருக்கின்றனர்.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதியை காங்கிரஸ் கேட்டுள்ளது. மயிலாடுதுறை தொகுதியில் ராகுல் காந்தியின் நண்பர் பிரவீன்சக்கரவர்த்தி களம் காண்கிறார் என்று காங்கிரஸ் கட்சியினரால் பேசப்பட்டு வருகிறது . இந்நிலையில் இந்த மாவட்டத்தின் மாப்பிள்ளை நான்! என்று திடீரென பட்டுக்கோட்டை ராஜேந்திரன் மயிலாடுதுறைக்கு வந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதையடுத்து மயிலாடுதுறை முன்னாள் நகர தலைவர் செல்வம் தனது பெண்ணுக்கு சீட்டு வழங்க வேண்டும் நான் பாரம்பரிய காங்கிரஸ் கட்சிக்காரர் என்று பேட்டி அளித்தார். இந்நிலையில் வாட்ஸ் அப் மூலம் எஸ் எம் பி துரை வேலன் என்பவர் "இவருக்கு இல்லாம வேறு யாருக்கு "யாருக்கு என்ற தலைப்பில் தகுதியான வேட்பாளரை டெல்லியில் தேடாமல் அயராது தேசிய இயக்கத்திற்காக தனது 45ஆண்டுகால வாழ்க்கையை பொதுவாழ்விற்கு அர்ப்பணித்த S.M.B.துரைவேலனை மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளராக வேண்டும்" என்று வாட்ஸ் அப் மூலம் கோரிக்கையை வெளியிட்டு அவர் முகத்தை முதன் முதலாக காட்டியுள்ளார்.

Tags

Next Story