மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அலுவலகம்: திருச்சி ஐஜி பார்வை

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அலுவலகம்: திருச்சி ஐஜி பார்வை

ஐ ஜி ஆய்வு

திருச்சி மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் மயிலாடுதுறையில் வருடாந்திர ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட திருச்சி மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், பதிவு செய்யப்பட்ட வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

பின்னர், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்தார், கண்காணிப்பு கேமராவின் செயல்திறன்களை கேட்டறிந்தார்.

தொடர்ந்து பால்பண்ணை பகுதியில் , புதிய எஸ்.பி.அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை, பார்வையிட்டார் அப்போது 4 ஏக்கர் 51 சென்ட் பரப்பளவில் எஸ்.பி.அலுவலக கட்டுவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளததாகவும், 3 மாதத்தில் கட்டிடம் கட்டுவதற்கான டென்டர் விடப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மீனா, ஏடிஎஸ்பி வேணுகோபால், டிஎஸ்பிக்கள் சஞ்சீவ்குமார், ராஜ்குமார் மற்றும்காவலர்க உடனிருந்தனர்.

Tags

Next Story