மயிலாடுதுறை போலீசார் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

மயிலாடுதுறை போலீசார் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்

நம் இந்திய திருநாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதியன்று தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது. தேர்தலின் போது இளம் வாக்காளர்கள் உட்பட அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்க ஊக்குவிப்பதே இந்த தேசிய வாக்காளர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். அதன்படி மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தக்ஷமீனா தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட காவல் துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். வாக்காளர் உறுதிமொழி மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி வகுப்பு மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்.

Tags

Next Story