வெள்ளிப்பதக்கம் வென்ற மயிலாடுதுறை மாணவி

பெடரேஷன் கோப்பை தடகளத்தின் போல் வால்ட் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் வசிக்கும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த போல்வால்ட் வீராங்கனை பரணிகா வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

27-வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், மே 14-ஆம் தேதி நடைபெற்ற பெண்களுக்கான போல் வால்ட் போட்டியில் தமிழ்நாடு மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சேத்திரபாலபுரத்தில் வசிக்கும் விவசாயி இளங்கோவன் என்பவரது மகள் தற்போது ரயில்வே துறையில் எழுத்தராக பணியாற்றிவரும் போல் வால்ட் வீராங்கனை பரணிகா 4 மீட்டர் உயரம் தாண்டி, இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் தட்டிச் சென்றார்.

இந்த போட்டியில் பரணிகா பங்கேற்ற விடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தின் ரோசி மீனா 4.05 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story