சோழவரம் அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

சோழவரம் அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

இறைச்சி கழிவுகள்

சோழவரம் அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் காரனோடை ஊராட்சியில் உள்ள ஜி.என்.டி சாலை அருகே தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அப்பகுதியில் உள்ளவர்கள் பள்ளியின் எதிரில் கோழி, மீன் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுகின்றனர். துர்நாற்றம் அதிகமாக வீசுவதால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

மேலும், இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சுகாதாரத் துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story