கரூரில் பிஜேபி மாவட்ட தலைவரை சந்தித்து வாழ்த்து

கரூரில் பிஜேபி மாவட்ட தலைவரை சந்தித்து வாழ்த்து

பாஜக மாவட்ட தலைவர்

அண்மையில் பிஜேபியில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் கரூரில் பிஜேபி மாவட்ட தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அண்மையில் பாஜகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் கரூரில் பிஜேபி மாவட்ட தலைவரை சந்தித்து வாழ்த்து. கரூர் சட்டமன்ற முன்னாள் எம்எல்ஏ கே. வடிவேல் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற முன்னாள் எம்எல்ஏ கந்தசாமி ஆகியோர் டில்லியில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இணைந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று மதியம் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வந்த இருவருக்கும், கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் பொன்னாடை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

இதற்கு, முன்னால் எம்எல்ஏக்கள் இருவரும் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர்கள் ஆறுமுகம், சக்திவேல் முருகன், மாவட்ட செயலாளர் செல்வராஜ், மருத்துவப் பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், இளைஞரணி மாவட்ட தலைவர் தீனசேனன், மகளிர் அணி மாவட்ட தலைவர் பிரியா ஈஸ்வரன், புகழூர் நகரத் தலைவர் கோபிநாத் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story