மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் 30 மாத்திரைகளுடன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் 30 மாத்திரைகளுடன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை. காவல்துறை வழக்கு பதிவு.
கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் எல்லைக்குட்பட்ட, விவிஜி நகர் அருகே தில்லைநகர் 8-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் மகன் சதீஷ்குமார் வயது 30. இவரது மனைவி பிரியதர்ஷினி வயது 26. சதீஷ்குமாருக்கு கடந்த 9 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆயினும் எதிர்பார்த்த அளவு குணமாகவில்லை. இதனால் விரத்தி அடைந்த சதீஷ்குமார், ஜனவரி 20ஆம் தேதி காலை 10 மணி அளவில் அவரது வீட்டில், வழக்கமாக அவர் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளில் 30- மாத்திரைகளும், எலி மருந்தையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த அவரது மனைவி பிரியதர்ஷினி, தனது கணவனை மீட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.அங்கு சிகிச்சையில் இருந்து வந்த சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பிரியதர்ஷினி வெங்கமேடு காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த சதீஷ்குமார் உடலை கோவை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story