மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு

காவல் நிலையம் 

கரூர் அருகே,மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தரைமட்ட நீர் தொட்டியில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரம் 1-வது கிராஸ், சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் மனைவி தீபா வயது 40. தீபாவிற்கு கடந்த 5- வருடங்களாக, உடல்நிலை மற்றும் மனநலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பிப்ரவரி 7ஆம் தேதி நள்ளிரவு 12:30 மணி அளவில் உறங்கச் செல்வதாக கூறிச் சென்றவர்,

அவர் வீட்டின் அருகாமையில் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அறிந்த தீபாவின் கணவர் குழந்தைவேல், இது குறித்து கரூர் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த தீபாவின் உடலை மீட்டு

உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story