எம்ஜிஆர்., பிறந்த நாள் கொண்டாட்டம்

கரூரில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவப் படத்துக்கு ஓபிஎஸ்., அணி சார்பில் பூக்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கட்சியின் நிறுவன தலைவருமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107-வது பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக ஓபிஎஸ் அணியினர் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள எம் ஜிஆர் ரசிகர்கள் இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

இதன் அடிப்படையில், கரூர் பேருந்து நிலையம் பகுதியில் அமைக்கப்பட்ட அலங்கார மேடையில் எம்ஜிஆர் திரு உருவ படத்திற்கு, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் தலைமையில் மலர் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில், எம்ஜிஆர் வேடமிட்ட கலைஞர் ஒருவர் கலந்து கொண்டு அனைவருக்கும் வாழ்த்து கூறினார். அவருக்கு மேற்கு மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் கணேசன், மாநில தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் ஏடிபி கணேசன், மாவட்ட துணை செயலாளர் ஐயப்பன். ஐ டி வி மாவட்ட செயலாளர் கரூர்அன்பு, சிறுபான்மைபிரிவு மாவட்ட செயலாளர். நைனா முகமது,கலைப்பிரிவு மாவட்டசெயலாளர். எம்ஜிஆர் முத்து,மத்தியநகர துணைசெயலாளர் ஜானகி, வடக்கு நகரசெயலாளர் அன்பழகன், தெற்குநகரசெயலாளர் கோபால், மாவட்ட பிரதிநிதி பெருமாள், வார்டுகழக செயலாளர்.ராஜ்குமார்,நகர வார்டு கழகசெயலாளர் ஜாபர்அலி மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story