மினி பேருந்தின் டயர் வெடித்ததால் - பயணி படுகாயம் !

மினி பேருந்தின் டயர் வெடித்ததால் - பயணி படுகாயம் !

காவல்துறை வழக்கு பதிவு

மினி பேருந்தின் டயர் வெடித்ததால், பயணி படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
மினி பேருந்தின் டயர் வெடித்ததால், பயணி படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, சர்ச்சுகார்னர், சாமிநாதபுரம் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் மகன் பிரவீன் குமார் வயது 21. இவர் மார்ச் 22ஆம் தேதி மதியம் 2 1/4 மணி அளவில், கரூரிலிருந்து கோவை செல்லும் சாலையில் சென்ற TAN 7776 என்ற எண் கொண்ட மினி பேருந்தில் பயணித்துள்ளார். இந்த மினி பேருந்தை கரூர், பள்ளபாளையம், ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த அருண்குமார் வயது 24 என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்தப் பேருந்து கரூர் - கோவை சாலையில் உள்ள LGB பெட்ரோல் பங்க் அருகே வேகமாக சென்றபோது, மினி பேருந்தில் டயர் வெடித்துள்ளது. அப்போது பேருந்துக்குள் அமர்ந்து பயணித்த பிரவீன் குமாருக்கு அருகில், பேருந்தின் பிளாட்பாரம் உடைந்து ,பிரவீன் குமாருக்கு இரண்டு கால்களிலும் காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக பிரவீன் குமாரை, அருகிலுள்ள கபிலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பிரவீன் குமார் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பேருந்தை வேகமாக இயக்கியதால், விபத்து ஏற்பட காரணமான மினி பேருந்து ஓட்டுனர் அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story