ம.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் !

ம.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் !

ம.க.ஸ்டாலின்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு பாஜக கூட்டணியில் பாமக சார்பில் ம. க. ஸ்டாலின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜக கூட்டணியில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளராக தஞ்சை வடக்குமாவட்ட செயலாளரும், தஞ்சை வடக்கு ஆடுதுறை பேரூராட்சி பெருந்தலைவருமான ம.க.ஸ்டாலின் போட்டி. பெயர் : ம.க.ஸ்டாலின் பொருப்பு : பாமக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர், ஆடுதுறை பேரூராட்சி பெருந்தலைவர் பிறந்த தேதி : 22.07.1970 வயது : 53 தகப்பனார் பெயர் : ஆ.கலியபெருமாள் தாயார் பெயர்: க.சரோஜா மனைவி பெயர் : செந்தமிழ் செல்வி ஸ்டாலின் மகன் மகள்கள் விவரம் : 2மகள் + 1மகன் சகோதரர்கள் : 3பேர் 1.ம.க.கல்யாணசுந்தரம் - விவசாயி 2.ம.க.பாலதண்டாயுதம் - கவுன்சிலர் ஆடுதுறை பேரூராட்சி 3..ம.க.ராஜா(மறைவு), உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வகித்த பதவிகள் : கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆடுதுறை பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்று பேரூராட்சி பெருந்தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார் . அரசியல் வாழ்க்கை தொடக்கம் : கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னாள் குடந்தை வட்டாரக்குழு செயலாளராகவும், மக்களுக்கான போராட்டங்களில் பங்கேற்று பெரும்பங்கு வகித்த மறைந்த மருத்துவக்குடி ஆ.கலிய பெருமாள் மகனான .ம.க.ஸ்டாலின் சிறுவயதிலிருந்தே போராட்டம் குணம் பெற்றவராகவும், பள்ளி காலம் முதலே பாட்டாளி மக்கள் கட்சியின் மீதும் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் மீதும் கொண்ட பற்றின் காரணமாக 1988ஆம் ஆண்டு குடந்தை அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் பாமக மாணவர் சங்க தலைவராக பொறுப்பேற்று தனது அரசியல் பயணத்தை தொடங்கி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கங்களில் ஒன்றியச் செயலாளர் முதல் மாவட்டம் மற்றும் மாநில பொருப்புகளில் பதவி வகித்தவர். தற்போது தஞ்சை வடக்கு மாவட்ட பாமக செயலாளராக பதவி வகிக்கிறார். போராட்டங்கள் : வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டி தஞ்சை டெல்டா பகுதிகளில் பல கட்டங்களாக இவரது தலைமையில் போராட்டங்களும், விவசாயி நலனுக்கான போராட்டம், காவிரி பிரச்சினைக்கான போராட்டம், மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள், மகளிர் நலனுக்கான போராட்டம், நெசவாளர் நலனுக்கான போராட்டம், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும், கதிராமங்கலம் மக்களின் ஓ.என்.ஜி.சிக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர் சின்ன அய்யாவோடு இணைந்து மக்கள் போராட்டம், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக்கோரி ஐந்தாண்டுக்கு மேலாக இவரது தலைமையில் தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம், உண்ணாவிரத போராட்டம், மனித சங்கிலி போராட்டம், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் தமிழக தலைநகரான சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம், உள்ளிட்ட பல்வேறு வகைகளில் நூதண போராட்டங்கள் இன்றுவரை தொடர்ந்து கொண்டே உள்ளது. தஞ்சை டெல்டா பகுதிகளில் கஞ்சா போதைப்பொருட்களை கட்டுப்படுத்தக்கோரி கதிராமங்கலத்தில் போராட்டம், என பாமக நிறுவனர் அறிவித்த கட்சி சார்ந்த போராட்டம் மட்டுமல்லாமல் பொதுமக்கள் நலன் சார்ந்த பல போராட்டங்களை முன்னெடுத்து வெற்றிக்கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story