கொலை வழக்கு: ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கு:  ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு கொலை வழக்கில் ஐந்து நபர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கயிலாடுதுறை அருகே வைத்தீஸ்வரன்கோவில் மருவத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுக்தேவ்(36) இவருக்கும் மருவத்தூர் பெரியத்தெருவை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்குமிடையே எச்சில் துப்பியது தொடர்பாக கொரோனா காலமான கடந்த 2020ம் ஆண்டு ஜுன் மாதம் 8ம் தேதி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் ஆனந்தனின் மகன் மற்றும் உறவினர்கள் 5 பேர் சுக்தேவை கட்டையால் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்த சுக்தேவ் புதுச்சேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்துபோனர். இது குறித்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து மருவத்தூர்பெரியத்தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன், அரவிந்தன், பாலகுரு, சிவசாமி, சிவகுரு ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இவ்வழக்கு மயிலாடுதுறை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராமசேயோன் ஆஜராகினார். 19 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டதை அடுத்து கொலை வழக்கில் தொடர்புடைய ரவிச்சந்திரன்(55), அரவிந்த்(31), பாலகுரு(49), சிவசாமி(60), சிவகுரு(58) ஆகிய 5 பேருக்கு ஆயுள்தண்டனையும், தலா 2 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார்.

அதனையடுத்து 5 பேரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

Tags

Next Story