"என் ஓட்டு... என் உரிமை" செல்பி பாய்ன்ட்டில் ஆட்சியர் விழிப்புணர்வு

என் ஓட்டு... என் உரிமை செல்பி பாய்ன்ட்டில் ஆட்சியர் விழிப்புணர்வு

செல்ஃபி பாயிண்ட் 

கரூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் "என் ஓட்டு... என் உரிமை" செல்பி பாய்ன்ட்டில் ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

பெரிய எதிர்பார்ப்புடன் துவங்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு அடையும் வகையிலும், வாக்காளர்கள் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், "என் ஓட்டு என் உரிமை" என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் செல்பி பாயிண்ட் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வட்டாட்சியர் முருகன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளும் உடன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags

Next Story