டாஸ்மாக் கடை அருகே மர்ம மரணம் - போலீசார் விசாரணை

டாஸ்மாக் கடை அருகே மர்ம மரணம் - போலீசார் விசாரணை

காவல் நிலையம் 

மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி அரசு டாஸ்மாக் கடை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே உள்ள தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் அழகர். இவர் சம்பவ தினத்தன்று பட்டவர்த்தி ஆற்றங்கரை ஓரம் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அவரது மனைவி மகேஸ்வரி மணல்மேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், முதல் நாள் பகல் 12 மணிக்கு வீட்ட விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை என்றும் பல இடங்களில் தெரியும் கிடைக்கவில்லை மறுநாள் டாஸ்மாக் கடை அருகே அவரது சடலம் கிடைக்கப்பெற்றது குறித்து விசாரணை செய்யக்கோரி அவர் மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story