ரயில் தண்டவாளத்தில் வடமாநில இளைஞர் சடலம் -போலீசார் விசாரணை.

ரயில் தண்டவாளத்தில் வடமாநில இளைஞர் சடலம் -போலீசார் விசாரணை.
ரயில் தண்டவாளத்தில் வடமாநில இளைஞர் சடலம் 

மீனாட்சிபுரம் அருகே உள்ள பொள்ளாச்சி - பாலக்காடு ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரயில்வே போலீசார் ஆனைமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.ஆனைமலை போலீசார் வெட்டப்பட்டு கிடந்த தலை மற்றும் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான சத்தேந்திர கோல் என்பதும், அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இவர் வளந்தாய மரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார்.வட மாநில தொழிலாளர்கள் ஒன்றாக அமர்ந்து மது குடித்த போது தகராறு ஏற்பட்டு சத்தேந்திர கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும்,அவரை கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் ரயில்வே தண்டவாளத்தில் போட்டு இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story