மயிலாடுதுறை பகுதிகளில் மின்வெட்டு அறிவிப்பு

மயிலாடுதுறை பகுதிகளில் மின்வெட்டு அறிவிப்பு

கோப்பு படம் 

மயிலாடுதுறை அர்பன் மற்றும் மணக்குடி துணை மின் நிலையங்களில் நாளை சனிக்கிழமை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் ரேணுகா, விடுத்துள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை அர்பன் மற்றும் மணக்குடி துணை மின் நிலையங்களில் நாளை சனிக்கிழமை 30ஆம் தேதி அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் 2 துணை மின் நிலையங்களிலிருந்து வினியோகம் செய்யப்படும்.

மயிலாடுதுறை நகரம், மகாதான தெரு, அரசு மருத்துவமனை சாலை, நாராயண பிள்ளை சந்து, தரங்கை சாலை, மன்னன் பந்தல், சீர்காழி மெயின் ரோடு, தர்மபுரம், திருஇந்தளூர், சோழசக்கர நல்லூர் ,ஆனந்த தாண்டவபுரம், மணக்குடி ஆகிய ஊரிலும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்பினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story