நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா வேட்ப மனுவை தாக்கல்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா வேட்ப மனுவை தாக்கல் செய்தார்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா வேட்ப மனுவை தாக்கல் செய்தார். கரூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் கருப்பையா கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று நாம் தமிழர் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் தலைமையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் இருந்து தனது கட்சி ஆதரவாளருடன் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கரூர் பாராளுமன்ற தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தங்கவேல் வசம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் வேட்பாளர் உறுதிமொழி ஏற்று, உறுதிமொழி ஆவணத்தில் கையொப்பம் செய்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். வேட்பாளர் கருப்பையா ஏற்கனவே நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்று தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story