பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாட்டம்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாட்டம்

செவிலியர் தின கொண்டாட்டம்

பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.

சர்வதேச செவிலியர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் மகத்தான சேவைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் பேரவை சார்பில் செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் தலைமை தலைமையில் நடைபெற்ற விழாவில் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டு செவிலியர்களுக்கு மாலை அணிவித்தும் பொன்னாடை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.

மேலும் கேக் வெட்டியும் புத்தகப் பரிசு வழங்கியும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் தொடர்ந்து மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களும் செவிலியர் தின உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story