மூதாட்டி மாயம்

பெரியகுளத்து பாளையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 80 வயது மூதாட்டியை காணவில்லை என போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி மாயம்- மகன் புகார்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பெரியகுளத்து பாளையம், பட்டவன் கோவில் தெரு, இரண்டாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி ஜானகி வயது 80. இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆயினும், எதிர்பார்த்த அளவில் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனிடையே டிசம்பர் 23ஆம் தேதி காலை 9 மணி அளவில், வீட்டிலிருந்து வெளியே சென்ற ஜானகி மீண்டும் வீடு திரும்பவில்லை. வழக்கமாக மூதாட்டி ஜானகி, செல்லும் இடங்களில் தேடிப் பார்த்தும், அப்பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டில் விசாரித்தும்,எவ்வித தகவலும் கிடைக்கப்பெறாததால், இது குறித்து தனது தாயாரை காணவில்லை என ஜானகியின் மகன் மாணிக்கம் வயது 46 என்பவர், வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மாயமான மூதாட்டி ஜானகியை தேடி வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags

Next Story