மனைவி மது குடிக்க பணம் தராததால் விஷம் குடித்து உயிரிழந்த முதியவர்

கரூர் மாவட்டம், வெங்கமேடு, சின்ன குளத்து பாளையம் பகுதி மனைவி மது குடிக்க பணம் தராததால் விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்துக்கொண்டார்.

மனைவி மது குடிக்க பணம் தராததால் விஷம் குடித்து உயிரிழந்த முதியவர். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், வெங்கமேடு, சின்ன குளத்து பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் வயது 64. மது பழக்கத்திற்கு அடிமையான கணேசன், தனது மனைவியிடம் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் ஜனவரி 29ஆம் தேதி மாலை 6 மணி அளவில், மீண்டும் தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு உள்ளார்.

அவரது மனைவி பணம் தர மறுத்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த கணேசன், எலி பேஸ்ட்டை வாங்கி உட்கொண்டுள்ளார். இதனை அறிந்த கணேசனின் மகன் முத்துக்குமார் வயது 38 என்பவர், உடனடியாக கணேசனை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் கணேசன். இந்த சம்பவம் தொடர்பாக முத்துக்குமார் வெங்கமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த கணேசன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags

Next Story