மண்மங்கலம் அருகே பைக் மோதி முதியவர் படுகாயம்

மண்மங்கலம் அருகே பைக் மோதி முதியவர் படுகாயம்

காவல் நிலையம்

மண்மங்கலம் அருகே பைக் மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி வயது 63. இவர் ஏப்ரல் 26 ஆம் தேதி இரவு 8 மணி அளவில், மதுரை- சேலம் சாலையில், மண்மங்கலம் பகுதியில் செயல்படும் சிந்து ஹோட்டல் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில்,

கரூர், நடையனூர் அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற மணி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மணிக்கு தலை மற்றும் இடது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த மணியின் மகன் லோகநாதன் வயது 31 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,

டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய ராஜ்மோகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.

Tags

Next Story