ரயில் மோதி முதியவர் பலி-போலீசார் விசாரணை

ரயில் மோதி முதியவர் பலி-போலீசார் விசாரணை

முதியவர் சடலம்

சிங்காநல்லூர் பாலம் அருகே ரயில் மோதி இறந்த முதியவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்காடு கோட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சியில் ரயில் சேவை நடை பெறுகிறது.இதன் மூலம் பொள்ளாச்சி மார்க்கமாக தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் அம்பராம்பாளையத்தில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் ரயில் வழி பாதையில் சிங்காநல்லூர் பாலம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் மீது இன்று மாலை 5 மணி அளவில் சென்ற ரயில் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இறந்த நபர் குறித்தும் முதியவர் தற்செயலாக ரயிலில் அடிபட்டாரா அல்லது யாரேனும் கொலை செய்தார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story