மகள் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்ற முதியவர் மாயம்

மகள் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்ற முதியவர் மாயம்

மகள் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்ற கரூரை சேர்ந்த முதியவர் மாயமான நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.  

மகள் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்ற கரூரை சேர்ந்த முதியவர் மாயமான நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.

கரூர் மாவட்டம், ஆண்டாங் கோவில், சரஸ்வதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன் வயது 70. இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், மே 4ஆம் தேதி மாலை 4:30- மணி அளவில், தனது மகள் வீட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, மகள் வீட்டிற்கும் அவர் செல்லவில்லை என தெரிய வந்தது.

இதனால், கருணாகரனின் மகன் நடராஜன் வயது 43 என்பவர், தனது தந்தை வழக்கமாக செல்லும் இடங்களில் தேடி பார்த்தும், உறவினர்கள் வீட்டில் விசாரித்தும், எவ்வித தகவலும் கிடைக்கப்பெறாததால், இது குறித்து காவல் நிலையத்தில் தனது தந்தையை காணவில்லை என புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்டு, சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மாயமான முதியவரை தேடி வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story