நாடாளுமன்ற தொகுதிக்கு ஏழு மனுக்கள் - தாக்கல் இல்லை !

நாடாளுமன்ற தொகுதிக்கு ஏழு மனுக்கள் - தாக்கல் இல்லை !

வேட்பு மனு தாக்கல் 

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அறிவிக்கப்பட்ட முதல் நாள் அன்று எவரும் மனுத்தக்கல் செய்ய வரவில்லை.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை. 11 மணி முதல் மதியம் 3.00 மணி வரை ஏழு மனுக்கள் மட்டும் வாங்கிச் செல்லப்பட்டது. நாம் தமிழர் கட்சி, பகுஜன்சமாஜ் கட்சி, மற்றும் சுயேட்சைகள் என ஏழு மனுக்கள் வாங்கப்பட்டுள்ளது. மனு தாக்கல் இன்று எதுவும் இல்லை. மனு தாக்கல் செய்ய அறிவிக்கப்பட்ட முதல்நாளன்று காற்று வாங்கியது.

Tags

Next Story