தருமபுரா ஆதீன நேர்முக உதவியாளருக்கு ஒரு நாள் போலீஸ் கஸ்டடி

தருமபுரா ஆதீன நேர்முக உதவியாளருக்கு ஒரு நாள் போலீஸ் கஸ்டடி

செந்தில் 

தருமபுரம் ஆதீன ஆபாச விடியோ விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நேர்முக உதவியாளர் திருவையாறு செந்திலை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் தொடர்பான ஆபாச விடியோ மற்றும் ஆடியோ உள்ளதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் பிப்ரவரி 28-ஆம் தேதி 9 பேர்மீது மயிலாடுதுறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், 2-வது குற்றவாளியான ஆதீனகர்த்தரின் முன்னாள் நேர்முக உதவியாளர் திருவையாறு செந்தில் ஜூன் 10-ம் தேதி வாரணாசியில் கைது செய்யப்பட்டு, மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்டு 15 நாள்களை கடந்த நிலையில், செந்திலை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மயிலாடுதுறை போலீஸார் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். நீதிபதி கலைவாணி குற்றம் சாட்டப்பட்ட செந்திலை ஒருநாள் மட்டும் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து, மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த திருவையாறு செந்திலை விசாரணை நடத்த போலீஸார் மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Tags

Next Story