விரக்தியில் வாழ்ந்தவர் உறங்கும் போது உயிரிழப்பு

வியாதிகளுக்கு ஆட்பட்டு விரக்தியில் வாழ்ந்தவர் உறங்கும் போது உயிரிழந்த சம்பவம் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வியாதிகளுக்கு ஆட்பட்டு விரக்தியில் வாழ்ந்தவர் உறங்கும் போது உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூரை அடுத்த அரசு காலணி, தேர்வீதி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாலன் மகன் சுந்தர் வயது 40. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தகாத பழக்கவழக்கங்களால், வெரிகோஸ் மற்றும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு விரக்தியில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் மே 6ஆம் தேதி, மதியம் ஒரு மணி அளவில் அவரது வீட்டில் உறங்கிய நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த அவரது தாயார் லட்சுமி வயது 70 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சுந்தர் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story