கேப்டன் விஜயகாந்த் மறைவை முன்னிட்டு ஓபிஎஸ் வருகை ரத்து

கேப்டன் விஜயகாந்த் மறைவை முன்னிட்டு ஓபிஎஸ் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் அணியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் அறிவித்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் மறைவை முன்னிட்டு ஓபிஎஸ் வருகை ரத்து. தமிழ் திரைப்பட முன்னணி நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும், தமிழக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஆன கேப்டன் விஜயகாந்த் இன்று உடல் நலம் குன்றி சென்னையில் காலமானார்.

தமிழக முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களும், முன்னணி நடிகர்களும், அவரது கட்சி நிர்வாகிகளும் மறைந்த தலைவருக்கு நேரடியாகவும், அந்தந்த பகுதிகளிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே நாடாளுமன்ற தேர்தல் குறித்து பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நாளை டிசம்பர் 29ஆம் தேதி கரூருக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.

கேப்டன் விஜயகாந்த் துக்க நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள இருப்பதால், தமிழகம் முழுவதும் அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரூரில், நடக்க இருந்த பூத்கமிட்டி ஆலோசனைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கட்சியின், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் சற்று முன் அறிவித்துள்ளார்.

Tags

Next Story