வாய்க்காலின் அடைப்பை சரி செய்யும் பஞ்சாயத்து தலைவர்

வாய்க்காலின் அடைப்பை சரி செய்யும் பஞ்சாயத்து தலைவர்

மயிலாடுதுறை அருகே மழைநீர் வடிந்து வரும் வாய்க்காலில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்யும் பஞ்சாயத்து தலைவர்

மயிலாடுதுறை அருகே மழைநீர் வடிந்து வரும் வாய்க்காலில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்யும் பஞ்சாயத்து தலைவர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக, மயிலாடுதுறை ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டமங்கலம் ஊராட்சியில், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்த நிலையில், ஆக்கிரமிப்புப்பால் மழைநீர் வடியாமல் இருந்தது, மேலும் அப்பகுதியில் உள்ள வாய்க்கால்கள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் வடியவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே பட்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி, அப்பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக, ஆக்கிரமிப்பில் உள்ள வாய்கால் ஆக்கிரமிப்புகளை, அகற்றி அங்கு புதிய வாய்க்கால் அமைத்து, தண்ணீரை வடியவமைக்கும் பணியில் ஈடுபட்டார். அடிக்கடி மழைநீர் வடிவதில் ஏற்படும் அடைப்புகளை அவரே நேரில் சென்று சரி செய்து வருகிறார்.

Tags

Next Story