கரூரில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சி வளர்ச்சி நிதி வசூல்

கரூரில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சி வளர்ச்சி நிதி வசூல்

வளர்ச்சி நிதி வசூல்

கரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சி வளர்ச்சி நிதி வாசுளிக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சி வளர்ச்சி நிதி வசூல். கம்யூனிஸ்டு கட்சிகள் பொதுமக்களுக்காக பல்வேறு பிரச்சனைகளை கையில் எடுத்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்களது பிரச்சினைகளை தீர்த்து வருகின்றனர். இது போன்ற சூழலில் அவர்களுக்கு தேவையான நிதியை பொதுமக்களிடம் இருந்து வசூலிப்பது வாடிக்கை. அதன் அடிப்படையில் இன்று கரூர் ஜவகர் பஜார் பகுதியில் கட்சி வளர்ச்சி நிதி வசூல் செய்வதற்காக உண்டியலில் கையில் ஏந்தி கட்சியின் மாவட்ட செயலாளர் நாட்ராயன் தலைமையில் மேற்கொண்டனர். அப்போது, ஜவகர் பஜார் பகுதியில் உள்ள கடைகள், ஆட்டோ ஓட்டுநர்கள், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள், கட்சி பொறுப்பாளர்களிடம் இருந்து உண்டியலில் ஏந்தி வசூல் செய்தனர். இந்த நிகழ்ச்சியில்,மாவட்ட துணைச் செயலாளர்கள் மோகன் குமார் மற்றும் சண்முகம் மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் கார்த்திகேயன், நிர்வாக குழு உறுப்பினர் குப்புசாமி, கரூர் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story