விஜயகாந்த் நினைவாக மக்களுக்கு கரும்பு வழங்கிய கட்சியினர்

விஜயகாந்த் நினைவாக மக்களுக்கு கரும்பு வழங்கிய கட்சியினர்

கரும்பு வழங்கிய தேமுதிகவினர்

விஜயகாந்த் நினைவை போற்றும் வகையில் தேமுதிகவினர் மயிலாடுதுறையில் 500 நபர்களுக்கு கரும்பு வழங்கினர்.

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் சென்ற மாதம் 28ஆம் தேதி இயற்கை எய்தினார், அவரது நினைவை போற்றும் வகையில் தேமுதிகவினர் தமிழக முழுவதும் பல்வேறு நலப்பணிகளை செய்து வருகின்றனர்.

இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற விஜய்காந்த் தாரக மந்திரத்திற்கேற்ப தமிழகத்தில்ஆங்காங்கே நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். மயிலாடுதுறை சின்னக் கடை வீதியில் காய்கறி கடை வைத்திருக்கும் வைத்தியலிங்கம் என்பவர் தேமுதிக ஆரம்ப காலத்தில் இருந்து கடசிப்பணியாற்றி தற்போது மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

அவர் இன்று தனது கடை முன்பாக 500 நபர்களுக்கு வழங்குவதற்காக கரும்பை அடுக்கி வைத்து அதில் விஜயகாந்த் படத்தை வைத்து மாலை அணிவித்தார். அவ்வழியே சென்றவர்களை அழைத்து ஆளுக்கு ஒரு கரும்பு விகிதம் வழங்கினார். பொதுமக்கள் இவர் வழங்கும் கரும்பை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

Tags

Next Story