தேர்தல் விதிமுறைகளை மீறி வரையப்பட்ட கட்சி சின்னங்கள்..

பொள்ளாச்சி அடுத்த பெரியபோது கிராமத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி வரையப்பட்ட அரசியல் கட்சியின் சுவர் விளம்பரங்கள் கண்டுகொள்ளாத தேர்தல் நடத்தும் அதிகாரிகள்.
இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அனைத்து மாநிலங்களிலும் பல கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது இதனால் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சி விளம்பரங்கள் பொது இடங்களில் இருக்கக் கூடாது, அரசு அலுவலகங்களில் கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் இருக்கக் கடாது., கட்சித் தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட வேண்டும் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டும் மற்றும் வாகனங்களில் கட்சி சார்ந்த கொடிகளை கட்டி செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளை விதித்துள்ளது.. இந்த நிலையில் பொள்ளாச்சி அடுத்த பெரிய போது கிராமத்தில் உள்ள பெரும்பாலான சுவர்களில் திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் விளம்பரங்கள் சின்னங்களோடு சுவரில் வரையப்பட்டிருக்கிறது.. தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் போது இது போன்ற விளம்பரங்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது பொள்ளாச்சியில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story