ஞானபுரீஸ்வரர் கோயிலில் பார்வதி கல்யாணம் பொம்மலாட்டம்

ஞானபுரீஸ்வரர் கோயிலில் பார்வதி கல்யாணம் பொம்மலாட்டம்

பொம்மலாட்டம் 

ஞானபுரீஸ்வரர் கோயிலில் நடந்த "பார்வதி கல்யாணம்" பொம்மலாட்ட நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோயில் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஆதீன திருமடத்தில், வருகிற 30-ஆம் தேதி வரை சமய பயிற்சி வகுப்பு, கருத்தரங்கம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் "பார்வதி கல்யாணம்" என்ற கருப்பொருளில் பொம்மலாட்டம் நடைபெற்றது. பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து 5 வயதிலேயே கானகம் சென்று தவத்தில் ஈடுபட்ட பார்வதி தேவி, தவத்தின் பலனாக சிவபெருமானை அடைந்த இந்த புராண வரலாற்றை, கலைமாமணி விருதாளர் சோமசுந்தரம், பொம்மலாட்டம் நிகழ்ச்சியின் வாயிலாக குழந்தைகளுக்கு தத்ரூபமாக வெளிக்காட்டினார். இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

Tags

Next Story