திருச்சி ரயில்வே கோட்டை மேலாளருக்கு பயணிகள் நன்றி தெரிவிப்பு !

திருச்சி ரயில்வே கோட்டை மேலாளருக்கு பயணிகள்  நன்றி தெரிவிப்பு !

பாத்ரூம்

மயிலாடுதுறையிலிருந்து சேலம் செல்லும் ரயிலின் கழிப்பறை திறக்க முடியாமலும் சுத்தம் இன்றி இருந்தது குறித்து ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்தவுடன் அவற்றை திருச்சி ஜங்ஷனில் சரி செய்ய வைத்த திருச்சி ரயில்வே கோட்டை மேலாளருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு நன்றி 7.4.24 இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து சேலம் சென்ற ரயிலில் பாத்ரூம் கதவு சரியில்லாமல் திறக்க முடியாமலும் பாத்ரூம் சுத்தம் இல்லாமல் பயணிகள் அவதிபட்டனர் ரயிலில் சென்ற பயணிகள் மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக திருச்சி கோட்ட மேலாளருக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டது கோட்ட மேலாளர் அவர்கள் எந்த ரயில் பெட்டியில் புகார் என்பதை தெரிவியுங்கள் எனக் கூறினார் உடனடியாக சக பயணிகள் இன்ஜினில் இருந்து மூன்றாவது பெட்டி என கூறினார்கள் கோட்ட மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக திருச்சி கோட்ட மேலாளர் உத்தரவிட்டதன் பேரில் திருச்சியில் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ரயிலுக்கு வந்து பாத்ரூம் சுத்தம் செய்யப்பட்டு ஓட்டை உடைசல் ஆன பழுதடைந்த பாத்ரூம் கதவு சரி செய்யப்பட்டு வண்டி இயக்கப்பட்டுள்ளது வண்டியில் சென்ற பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்த கோட்ட மேலாளர் அவர்களுக்கு மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் அறிக்கை விடுத்துள்ளது.

Tags

Next Story