கரூரில் மாவட்ட திமுக சார்பில் அமைதி பேரணி

கரூரில் மாவட்ட திமுக சார்பில் அமைதி பேரணி

அமைதி பேரணியில் கலந்து கொண்டவர்கள் 

கரூரில் மாவட்ட திமுக சார்பில் அறிஞர் அண்ணா 55 ஆம் ஆண்டு நினைவு அமைதி பேரணி நடைபெற்றது.

கரூரில் மாவட்ட திமுக சார்பில் அறிஞர் அண்ணா 55 ஆம் ஆண்டு நினைவு அமைதி பேரணி நடைபெற்றது. தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக கட்சியில் நிறுவன தலைவருமான, அறிஞர் அண்ணா 55 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று.

அவரது நினைவு தினத்தை போற்றும் வகையில், கரூர் மாவட்ட திமுக கட்சி அலுவலகமான அறிவாலயத்தில் இருந்து மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில், ஊர்வலமாக புறப்பட்டு, கரூர்-கோவை சாலை வழியாக, கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு வந்து, அவரது திருவுருவ சிலைக்கு மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு அறிஞர் அண்ணாவின் புகழை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, இளங்கோ, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு அணிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story