கரூரில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் !

கரூரில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் !

கரூர்

கரூரில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

கரூரில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. கரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், பொது விநியோகத் திட்டம் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013ன் படி குடும்ப அட்டையில் உள்ள குறைகளை போக்கும் விதமாக குறைதீர் கூட்டம் வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது.

குடும்ப அட்டைதாரர்கள், குடும்பத்தில் உள்ள நபர்கள் பெயர் நீக்கம், சேர்த்தல் மற்றும் அலைபேசி எண் மாற்றம் தொடர்பாக திருத்தம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட வட்ட வழங்கல் அலுவலர், அவர்களது குறைகள் குறித்த மனுக்களை பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story