பெரியாண்டாங் கோயில்- பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது

பெரியாண்டாங் கோயில்- பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது

 சூதாடிய ஐந்து பேர் கைது

பெரியாண்டாங் கோயில் பகுதியில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது. ரூ 5,660- பறிமுதல்.
பெரியாண்டாங் கோயில் பகுதியில் பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது செய்து ரூ 5,660- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, பெரியாண்டாங் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் டிசம்பர் 24ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் பெரியாண்டாங் கோவில் பகுதியில் கோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட பெரியாண்டாங் கோயில், பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய், ரவிக்குமார், பழனிசாமி, முருகேசன், ராமசாமி ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து, அவர்கள் பணம் வைத்து சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.5,660-தையும் பறிமுதல் செய்தனர். 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story