புளியம்பழம் உலுக்கிய நபர் கீழே விழுந்து உயிரிழப்பு

புளியம்பழம் உலுக்கிய நபர் கீழே விழுந்து  உயிரிழப்பு

பைல் படம்

மயிலாடுதுறையை அருகே புளியம்பழம் உலுக்கிய நபர் கீழே விழுந்து அடிபட்டு உயிரிழந்தார்.

மயிலாடுதுறையை அடுத்துள்ள மாப்படுகையை சேர்ந்தவர் வில்லியமகன் ஜான் பீட்டர் கடந்த மாதம் 25ஆம் தேதி மாப்படுகை கீழத் தெரு அருண் வீட்டில் புளியம்பழம் உலுக்கும்பொழுது மரத்திலிருந்து தவறி விழுந்து அடிபட்டு சிகிச்சையிலிருந்தவர் உயிரிழந்தார். மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை கீழத்தெருவை சேர்ந்தவர் வில்லியம் மகன் ஜான் பீட்டர்.

இவர் சென்ற மாதம் 25ஆம் தேதி அதே பகுதியில் உள்ள அருண் என்பவரது விட்டு கொல்லையிலிருந்த புளிய மரத்தில் ஏறி புளி உளுக்கிக்கொண்டிருந்தார், மதிய வேளையில் திடீரென்று கால் வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார், படுகாயம் அடைந்த அவரை உடனடியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்ததால் அவரை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து ஜான் பீட்டர் மனைவி கவியரசி அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story