பழக்கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேர் கைது

பொள்ளாச்சியில் குழந்தை கடத்த வந்த நபர் என கூறி பழக்கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி பகுதியில் குழந்தை கடத்த வந்த நபர் என கூறி பழக்கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூன்று அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பு.. பொள்ளாச்சி.. மார்ச்..17 தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (29) என்பவர் பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் வீதியில் உள்ள பழக்கடையில் வேலை செய்து வருகிறார்..

இவர் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு வேலை முடித்துவிட்டு அவர் தங்கும் அறைக்கு சென்று கொண்டு இருந்தபோது பொள்ளாச்சி தண்ணாசியப்பன் கோவில் வீதி அருகே நின்றிருந்த மூன்று நபர்கள் விக்னேசை வழிமறித்து குழந்தையை கடத்த வந்த நபர் என கூறி அவரை சராமரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.. காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இது குறித்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விக்னேசை தாக்கிய தண்ணாசியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த தம்பான் (35) குணசேகரன் (25) கருப்புசாமி (34)உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story