டூவீலரை களவாடிய மர்மநபர் மீது காவல் துறை வழக்கு பதிவு

டூவீலரை களவாடிய மர்மநபர் மீது  காவல் துறை வழக்கு பதிவு
பைல் படம்
கரூரில் நிறுவனத்தில் நிறுத்தி இருந்த டூவீலரை களவாடிய மர்மநபர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்தது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சி ஏ கே சாலை, எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் அருண்குமார் வயது 23. இவர் அப்பகுதியில் செயல்படும் அட்லஸ் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 8-ம் தேதி காலை 7 மணி அளவில், அந்த நிறுவனத்தில் தனது டூவீலரை நிறுத்தி இருந்தார். இந்த டூவீலரை மர்ம நபர் யாரோ களவாடி சென்று விட்டார்.

தனது வாகனம் களவாடப்பட்டது கண்டு அறிந்து அதிர்ச்சி அடைந்த அருண்குமார், இது குறித்து நிறுவனத்தில் பணியாற்றும் சக தொழிலாளர்களிடம் விசாரித்துள்ளார். ஆயினும், அவரது டூவீலர் குறித்து எந்த தகவலும் கிடைக்கப் பெறாதால், இது குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், களவாடப்பட்ட அந்த வாகனத்தின் மதிப்பு ரூபாய் 20,000- இருக்கும் என மதிப்பீடு செய்த காவல்துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, டூவீலரை களவாடிய மர்மநபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story