அழுக்கு சாமி கோயில் குரு பூஜையில் பாண்டிச்சேரி முதல்வர் பங்கேற்பு.

அழுக்கு சாமி கோயில் குரு பூஜையில் பாண்டிச்சேரி முதல்வர் பங்கேற்றார்.

ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன் புதூர் பகுதியில் அமைந்துள்ளது அழுக்கு சாமி திருக்கோயில்.உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 104வது குருபூஜை இன்று நடைபெற்றது.இந்த பூஜையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேரில் வந்து கலந்து கொண்டார்.

மேலும் முதல்வர் ரங்கசாமி சாமிக்கு தீபாராதனை காட்டி சித்தர்களிடம் ஆசி பெற்றார். இந்த குரு பூஜையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அதிக அளவு பக்தர்கள் கூட்டம் இருந்ததால் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்

Tags

Next Story