புலியூரில் இன்று மின்தடை

கரூர் சுற்றுவட்டார பகுதி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகப்பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரை அடுத்த புலியூர், உப்பிடமங்கலம், எஸ். வெள்ளாளப்பட்டி, வேப்பம்பாளையம் உள்ளிட்ட 110 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று காலை 9- மணி முதல் மாலை 3- மணி வரை மேற்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் கணிகை மார்த்தாள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை தவிர்க்க, முன்கூட்டியே பொதுமக்கள் தங்கள் பணிகளை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

Tags

Next Story