தனியார் பேருந்து மோதி விபத்து - ஒருவர் படுகாயம்

தனியார் பேருந்து மோதி விபத்து - ஒருவர் படுகாயம்

 தனியார் பேருந்து மோதி விபத்து - ஒருவர் படுகாயம்

சைக்கிளில் சென்றவர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து. ஒருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட, கே ஆர் காலனி, அமராவதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி வயது 75. இவர் பிப்ரவரி 13ஆம் தேதி மதியம் 12:15 மணியளவில் திருச்சி - கரூர் சாலையில் அவரது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் வடக்கு பாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில், திருச்சி மாவட்டம், துறையூர், ஏரகுடி பகுதியைச் சேர்ந்த கோபி வயது 38 என்பவர் ஓட்டி வந்த தனியார் பேருந்து, முத்துச்சாமி ஓட்டி சென்ற சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் முத்துசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த முத்துசாமியின் மகன் மனோகரன் வயது 45 என்பவர், இது குறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பேருந்தை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டிய கோபி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story