தனியார் பார்சல் லாரி கவிழ்ந்து விபத்து

தனியார் பார்சல் லாரி கவிழ்ந்து விபத்து

விபத்து 

மயிலாடுதுறை அருகே பல்வேறு பொருட்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சென்னையில் உள்ள பார்சல் சர்வீஸ் முருகன் ட்ரான்ஸ்போர்ட்டுக்கு சொந்தமான லாரியில் சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூரில் உள்ள பல்வேறு கடைகளுக்கு உரிய பொருட்களை ஏற்றி சென்று இறக்கி வருகிறது. இந்நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் மணி லாரியில் பொருட்களை ஏற்றி கொண்டு மயிலாடுதுறைக்கு வந்தார்.

அப்போது கஞ்சாநகரம் பொன்னுகுடி சாலை குறுகலானதாக இருந்ததால் லாரி சென்றகொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே இருந்த மின்கம்பி உரசாமல் இருக்க சாலைஓரமாக லாரியை ஓட்டுநர் இயக்கியபோது மண்சரிவு ஏற்பட்டு லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் எந்தவித காயங்களின்றி லாரி ஓட்டுநர் மணி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். தொடர்ந்து மாற்று லாரி வர வழைக்கப்பட்டு பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து செம்பனார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story