தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை


கரூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
கரூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்த நபர் கைது. டிக்கெட்டுகள் பறிமுதல். கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி டிக்கெட் விற்பனை நடப்பதாக பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அழகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், பசுபதிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள பைவ் ஸ்டார் மொபைல் ஷாப் அருகே தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி டிக்கெட் விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது. இந்த விற்பனையில் ஈடுபட்ட, பசுபதிபாளையம், நடுத்தெருவை சேர்ந்த ரங்கசாமி மகன் நித்திலாமணி வயது 52 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த ரூபாய் 950 மதிப்புள்ள 15 லாட்டரி டிக்கெட்டுகளையும், விற்பனை செய்து கையில் வைத்திருந்த ரூபாய் 450-யும் பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்து, காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story


