தேர்தல் நிதி பாஜகவுக்கு அளித்தது யார் எஸ்பிஐ எதிர்த்து போராட்டம்

தேர்தல் நிதி  பாஜகவுக்கு அளித்தது யார் எஸ்பிஐ எதிர்த்து போராட்டம்

போராட்டம்

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் வாங்கிய நிதி விபரத்தை உச்சநீதிமன்றம் சொன்ன பின்பும் வெளியிடாத எஸ்பிஐ வங்கி நிர்வாகத்தை கண்டித்து மயிலாடுதுறையில் கம்யூ.மார்க் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் வாங்கிய நிதி விபரத்தை உச்சநீதிமன்றம் சொன்ன பின்பும் வெளியிடாத பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்தை கண்டித்து மயிலாடுதுறையில் மார்க்லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாரத ஸ்டேட் வங்கியில் மயிலாடுதுறை கிளை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில், துரைராஜ் கணேசன், ரவி ஸ்டாலின் குணசேகரன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர், தொடர்ந்து, பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் மற்றும் மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story